சென்னை மாவட்டத்தை சேர்ந்தவர் சரவணன் – பிரியா தம்பதியினருக்கு கரோலின்(1) என்ற குழந்தை உள்ளது. இவர்கள் மூவரும் பாடி மேம்பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த டிப்பர் லாரி கட்டுப்பாட்டை இழந்து இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் குழந்தை மற்றும் தம்பதியினர் மூவரும் கீழே விழுந்தனர்.

அப்போது டிப்பர் லாரி கீழே விழுந்த பிரியாவின் மீது ஏறியதால் அவரின் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். குழந்தை மற்றும் சரவணனுக்கு படுகாயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் உள்ளனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. மேலும் சரவணனுக்கு மருத்துவமனையில்  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அறிந்த போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.