ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளருமான மைக் ஹஸ்சி ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார். அதாவது சென்னை அணிக்காக விளையாடி வரும் எம்.எஸ். தோனி இன்னும் 2 வருடங்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என்று கூறியுள்ளார்.

தோனி ஒரு திறமையான வீரர் என்பதால் அவர் இன்னும் 2 ஆண்டுகள் தொடர்ந்து விளையாடுவார் என்று தான் நம்புவதாக கூறியுள்ளார். ஆனால் இதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மேலும் ஓய்வு குறித்து தோனி மட்டும் தான் முடிவெடுக்க முடியும் என்று கூறியுள்ளார்.