பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) தொடரை இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடருடன் ஒப்பிட்டுப் பேசி வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு (PCB), அந்நாட்டின் முன்னாள் வீரர் அகமது ஷேசாத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் விளையாட வாய்ப்பு கிடைக்காதவர்கள் அல்லது சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் மட்டுமே பிஎஸ்எல் தொடரில் விளையாடுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐபிஎல் தொடருடன் பிஎஸ்எல் ஒருபோதும் இணையாக முடியாது என்றும், பிசிபி-யின் இத்தகைய ஒப்பீடுகள் உலகளவில் கேலிக்குரியதாக மாறுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார். குறிப்பாக, ஐபிஎல் தொடருக்காக பிஎஸ்எல்-லிலிருந்து வெளியேறிய பிளெசிங் முசரபானிக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதித்த பிசிபி-யின் முடிவை ஷேசாத் கடுமையாகச் சாடியுள்ளார்.
📢 Ahmed Shehzad brutally owned PSL:
You only have players left in the PSL who have either retired from the IPL, gone unsold in the IPL, or have no future in the IPL, like David Warner and Steve Smith. If any current player has a chance to play, they will choose the IPL. So how… pic.twitter.com/2GTSopxZPA
— TEJASH (@Tejashyyyyy) April 14, 2026
இதேபோல் வெளியேறிய மற்ற வீரர்களை விட்டுவிட்டு முசரபானியை மட்டும் தண்டிப்பது முறையற்றது என்று அவர் வாதிட்டுள்ளார். வீரர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் அவர்கள் எப்போதும் ஐபிஎல் தொடரையே தேர்ந்தெடுப்பார்கள் என்றும், பாகிஸ்தான் வாரியம் தனது தரம் குறைந்த அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
