கேரளாவில் சாலை விபத்தில் சிக்கி கடந்த ஒரு மாத காலமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நடிகை அருந்ததி நாயரின் உடல்நிலையில் இதுவரை எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை என்று மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் 14ஆம் தேதி முதல் அவருக்கு ஐசியு பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அவருக்கு ஒரு நாள் மருத்துவ செலவாக இரண்டு லட்சம் ரூபாய் இருக்கும் நிலையில் இதுவரை திரையுலகை சேர்ந்த எவரும் முன்வரவில்லை என்று உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.