உத்தர்காண்டில் நவம்பர் 12 அன்று சுரங்க பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. தற்போது துளையிடும் பணியில் எலி வளை நிபுணத்துவ தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தொழிலாளர்களை வைத்து இடிபாடுகளை அகற்றுவது கடினமான பணி என்றாலும் தற்போது இது ஒன்றுதான் சிறந்த வழி என்பதால் இது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

10 லிருந்து 12 மீட்டர் தொலைவு வரை இடிபாடுகளை அகற்ற வேண்டிய சூழல் இருந்த நிலையில் 7 மீட்டர் வரை எலி வளைத் தொழிலாளர்கள் முழு முயற்சியுடன் செயல்பட்டு தொலையிட்டுள்ளனர். இதனால் இன்னும் ஐந்து மீட்டர் தூரம் தான் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே விரைவில் சுரங்கப்பாதைகள் சிக்கிய தொழிலாளர்கள் மீட்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.