ஆந்திர மாநிலத்தில் உள்ள விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு இரண்டு நாள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. போராட்டத்தின்போது விவசாயிகள் பிரதமர் நரேந்திர மோடியின் முகமூடியை அணிந்தவாறு கோஷங்கள் போட்டனர்.

விவசாய மோட்டோர்களுக்கு முன்பணம் செலுத்தப்பட்ட ஸ்மார்ட் மின் மீட்டர்களை திரும்ப பெற வேண்டும் என்றும் மின்சார மசோதா 2020 ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

பாஜக ஆட்சிக்கு வந்ததும் வாக்குறுதிகளை புறக்கணித்து விட்டதாகவும் விவசாயத்தைக் கார்ப்பரேட் துறைக்கு தாரை வார்ப்பதை மத்திய அரசு கொள்கையாக வைத்திருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.