
பிரபல போஜ்புரி பட நடிகர் ரவி கிஷன். இவர் கோரக்பூர் மக்களவைத் தொகுதி எம்பி ஆவார். இவருக்கு தற்போதைய நாடாளுமன்ற தேர்தலிலும் கோரக்பூர் தொகுதியில் போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில் அபர்ணா தாக்கூர் என்ற பெண் சமீபத்தில் தான் ரவி கிசனின் 2-வது மனைவி என்றும், எங்களுக்கு ஷின்னோவா என்ற மகள் இருக்கிறார் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதற்கு ரவி கிஷனின் மனைவி பிரீத்தி மறுப்பு தெரிவித்ததோடு தன் கணவர் தேர்தலில் போட்டியிடும் சமயத்தில் அவர் மீது அவதூறு பரப்புவதற்காகவே இப்படி ஒரு குற்றசாட்டை சுமத்தியுள்ளதாக கூறினார்.
அதோடு ரூ. 20 கோடி பணம் கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அபர்ணா தாக்கூர் மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அபர்ணாவின் மகள் ஷின்னோவா நடிகையாக இருந்து வரும் நிலையில் அவர் தற்போது மும்பை நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் ரவி கிஷன் தான் தன்னுடைய தந்தை என்றும் இது தொடர்பாக மரபணு சோதனை செய்ய வேண்டும் எனவும் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் தன்னுடைய தாய் மீதான வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.