தமிழகத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரொக்கப் பணத்துடன், பச்சரிசி, கரும்பு, வெல்லம் அல்லது சர்க்கரை ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அதே போல 2024ஆம் ஆண்டும் பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் ரொக்கமும் பச்சரிசி, கரும்பு போன்ற பொருட்களும் தரப்பட இருப்பதாக தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 1,000 வழங்குவது குறித்து, ஜனவரி முதல் வாரத்தில் (5ஆம் தேதி) அரசு அதிகாரிகள் ஆலோசனை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனைக்கு பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு, ஜன.9 முதல் டோக்கன் விநியோகம் செய்து, 11ஆம் தேதியிலிருந்து ரேஷன் கடைகள் மூலம் ரூ. 1000 ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என கூறப்படுகிறது