
மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் நகரத்தில், வெப்பத்திலிருந்து தப்பிக்க முயன்ற 2 வயது சிறுவன், தண்ணீர் நிரப்பிய செம்பு பாத்திரத்தில் சிக்கிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் சாகர் நகரின் சக்ரகாட் வார்டில் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
அதாவது அனுஜ் ஜெயின் என்பவரின் மகனான ஆரவ் ஜெயின், காலை 10 மணியளவில் மொட்டை மாடியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அருகிலிருந்த ஒரு பெரிய செம்பு குடத்தில் நுழைந்து விளையாட முயன்றான். ஆனால் சிறுவன் அந்த பாத்திரத்தில் சிக்கிக்கொண்டான்.
ஆரவ் முதலில் ஒரு காலை பாத்திரத்தில் வைத்த நிலையில் அடுத்ததாக இரண்டாவது காலையும் வைத்துப் பக்குவமாக அமர்ந்தான். பின்னர், பாத்திரத்தின் வடிவமைப்பினால் குழந்தையின் கால்கள் சிக்கிக்கொண்டன. குழந்தையை வெளியே எடுக்க குடும்பத்தினர் பலமுறை முயற்சித்தும் முடிக்க முடியாததால், குழந்தையை அருகிலுள்ள சமேலி சவுக்கில் உள்ள அசோக் தாம்ரகரின் பாத்திரக் கடைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு கடைக்காரர் சுத்தியல் மற்றும் உளியை பயன்படுத்தி பாத்திரத்தின் மேல் பகுதியை மெதுவாக வெட்டினார். இந்த நிலையில் குழந்தை அழத் தொடங்கியதாலும், உறவினர்கள் அதனை கவனத்தை விளையாட்டில் ஈடுபடுத்த முயன்றனர். சுமார் சில நிமிடங்களில் பாத்திரத்தின் மேல்பகுதி வெட்டப்பட்டதும், குழந்தையை சிக்கலின்றி பாதுகாப்பாக வெளியே எடுத்தனர். இதையடுத்து, குடும்பத்தினர் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். மேலும் வெளியே சூடாக இருந்ததால் குழந்தை பாத்திரத்தில் உட்கார்ந்து அதில் சிக்கிக்கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.