தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான பணியில் தற்போது அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது மகளிர் உரிமைத் தொகை திட்டம் மீது எனது முழு கவனமும் உள்ளது, எந்த சிக்கலும் இல்லாமல் மகளிர் உரிமை தொகை திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

யாருக்கெல்லாம் உரிமை தொகை அவசியமோ அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் சென்றடைய வேண்டும். அரசின் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு சென்றடைவதை அதிகாரிகள் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் என்பது மிகவும் கடமை பொறுப்பு மிக்க பதவிகள் ஆகும். இத்தகைய உயர் பதவிகளுக்கு உங்களை உயர்த்தியவர்களை வாழ்க்கையில் எந்த நாளும் மறக்காதீர்கள் என்று கூறி இந்திய குடிமைப்பணி தேர்வில் வெற்றி பெற்ற தமிழகத்தை சேர்ந்த 33 மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.