தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித்குமார். இவர் ரசிகர்களால் தல அஜித் என்று அழைக்கப்படுகிறார். ஆரம்ப காலகட்டத்தில் மிகவும் கஷ்டப்பட்டு தற்போது உயர்ந்த இடத்தை பிடித்துள்ளார். இவர் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் திரையுலகுக்கு வந்து தனக்கான சாம்ராஜ்யத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். திடக்கத் இவரின் பல படங்கள் தோல்வி அடைந்தன. அதன் பிறகு இயக்குனர் வசந்த் இயக்கத்தில் அவர் நடித்த ஆசை படம் மெகா ஹிட் ஆனது. அதன் பிறகு அவர் ஆசை நாயகன் என்று அழைக்கப்பட்டார். இவரின் 50 ஆவது படமான அமர்க்களம் படத்திலிருந்து தான் ஷாலினிக்கும் இவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. அதன் பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் நடிகர் அஜித்திற்கும், வடிவேலுவுக்கு நடந்த மனக்கசப்பு குறித்த தகவலை பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் செய்யாறு பாலு பகிர்ந்துள்ளார். அதில், “ராஜா படத்தில் நடித்தபோது நடிகர் வடிவேலு அஜித்தை வாப்பா, போப்பா என்று பேசியதோடு, சில நேரங்களில் மரியாதை குறைவாகவும் பேசியுள்ளார். இதனால், வடிவேலு என்றாலே என் படத்திற்கு வேண்டாம் என கண்டிப்பாக அஜித் கூறினார்” என தெரிவித்தார்.