தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய். இவர் சினிமாவில் நடிகர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இவர் சினிமா மேக்கிங் குறித்து வெளிநாட்டில் படித்து முடித்த இவர் தற்போது குறும்படங்களையும் இயக்கி வருகிறார் .விஜய் தன்னை போலவே தன்னுடைய மகனையும் ஹீரோவாக்கிவிட வேண்டும் என்று நினைத்து வருகிறாராம். பல இயக்குனர்களும் விஜயின் மகனை நடிக்க வைக்க போட்டி போட்டு வந்தாலும் இயக்குனராகவே சஞ்சய்க்கு விருப்பமாக உள்ளதாம்.

இந்த நிலையில் விஜய் மகனோடு நடிகை தேவயானியின் மகள் ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இயக்குனர் ராஜகுமாரன் தன் மக்களுக்கு ஜோடியாக விஜய் மகனை நடிக்க வைக்க ஆசை என்று கூறியுள்ளார். தேவயானி இரண்டாவது மகள் இனியா தற்பொழுது பன்னிரண்டாம் வகுப்பு முடித்து கல்லூரியில் சேர்ந்துள்ளார். இந்த நிலையில் நீ வருவாய் என என்ற திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருப்பதாகவும் இதில் தன்னுடைய மகள் இனியாவை நடிக்க வைக்க இருப்பதாகவும் கூறியுள்ளார். இந்த படத்தில் விஜயின் மகன் சஞ்சய் தன்னுடைய மகளுக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.