‘அன்பே சிவம்’. ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ உள்ளிட்ட பல ஹிட் சீரியல்களில் நடித்தவர் சீரியல் நடிகை தீபா. இந்நிலையில் காதல் திருமணம் செய்த கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி அவர், சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஏற்கனவே, திருமணம் ஆகி விவாகரத்து ஆன நிலையில் கணேஷ் பாபு என்பவருடன் நடிகை தீபா பதிவு திருமணம் செய்துகொண்டார்.

தற்போது, கணேஷ் பாபு பிரிந்து வாழ்வதால் சேர்த்து வைக்கக் கோரி தீபா வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் கணேஷ் பாபுவின் குடும்பத்தினர் தன்னை சாதி ரீதியாக இழிவுபடுத்தியதாகவும் தீபா குற்றச்சாட்டு வைத்துள்ளார்.