
உத்திரபிரதேசம் மாநிலத்தில் கிட்டத்தட்ட 28 வருடங்களாக நண்பர்களாக பழகிய இருவர் சம்பந்திகளாக மாற முடிவு செய்தனர். அதன்படி அவர்களின் மகனுக்கும் மகளுக்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில் விரைவில் திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் மணப்பெண்ணின் தாயாருக்கு 35 வயது ஆகும் நிலையில் அவர் மணமகனின் தந்தையுடன் வீட்டை விட்டு ஓடிவிட்டார்.
விரைவில் இவர்களுடைய பிள்ளைகளுக்கு திருமணம் நடைபெற இருந்த நிலையில் மணமகளின் தாயாரும் மணமகனின் தந்தையும் வீட்டை விட்டு ஓடியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் மணமகனின் தந்தைக்கு 10 பிள்ளைகளும், மணமகளின் தாயாருக்கு 6 குழந்தைகளும் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் 16 குழந்தைகளை தவிக்கவிட்டு ஓடிவிட்டனர். மேலும் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து இருவரையும் தேடி வருகிறார்கள்.