சமூக ஊடகங்களில் தினமும் ஏதாவது ஒன்று வைரலாகி வருகிறது. சமீபத்தில், ஒரு பெண் தவளைகளை சமைத்து சாப்பிடும் வீடியோ ஒன்று இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண், தவளைகளை உணவாக சமைப்பது மட்டுமல்லாமல், மிகுந்த ஆர்வத்துடன் அதைப் பருகும் காட்சிகளும்  இடம் பெற்றுள்ளன.

வீடியோவில், அந்தப் பெண் முதலில் ஒரு தட்டில் நான்கு இறந்த தவளைகளை அலங்கரித்து வைத்துள்ளார். பிறகு, அவற்றின் வாயில் குச்சிகளை செருகி, அதற்குள் உயிருள்ள சிறிய மீன்களை போடுகிறாள்.

பின்னர் கடலை மாவில் தோய்த்து, நீராவியில் வேகவைத்து, அதன் மீது ஒரு வகை குழம்பையும் பச்சை வெங்காயத்தையும் சேர்த்து பரிமாறுகிறாள். இதனை சாப்பிடும் போது அந்தப் பெண் மிகுந்த ரசனையுடன் காணப்படுகிறார்.

இந்த வீடியோ X தளத்தில் @Sarahhuniverse என்ற கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதுவரை 74 லட்சம் பேர் பார்த்து, 8 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர். பலரும் வீடியோவின் மீது அதிர்ச்சி, வியப்பு, கலாச்சார புரிதல் என கலந்த கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

ஒருபக்கம் சிலர் இதைப் பார்த்து “தவளையை உண்பது சாத்தியமா?” என அதிர்ச்சி அடைந்திருந்தால், மற்றொருபக்கம், “பல நாடுகளில் இது சாதாரணமான உணவு கலாச்சாரம்” என கமெண்ட் செய்து வருகின்றனர். கலாச்சார வேறுபாடுகள் தொடர்பான விவாதங்களையும் இந்த வீடியோ தூண்டியுள்ளது.