
கர்நாடக மாநிலத்தில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கணவர் தன்னைவிட வளர்ப்பு பூனை மீது அதிக அக்கறை காட்டுவதாக கூறி அந்த பெண் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி குற்றச்சாட்டின் முக்கிய அம்சம் ஒரு வளர்ப்பு பூனை சம்பந்தமான சண்டையின் அடிப்படையில் அமைந்துள்ளது. இது சட்ட துஷ்பிரயோகமாகும். இது போன்ற அற்ப வழக்குகள் தான் இன்று குற்றவியல் நீதி அமைப்பை அடைத்துள்ளன என கூறி அந்த வழக்கை தள்ளுபடி செய்தார்.