நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, என் மீது ஆதாரம் இல்லாத மற்றும் அவதூறான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆதாரமற்ற வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தடை செய்ய வேண்டும் என்று வழக்கு தொடர்ந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நான் வரவேற்கிறேன். நீதிமன்றமே என்னை பாலியல் குற்றவாளி என்று கூறாத நிலையில் நீங்கள் எப்படி என்னை சொல்லலாம். சென்னையில் பெரியார் திராவிட கழகத்தினர் என்னை பற்றி அவதூறு சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். அவ்வளவுதான் அவர்களுடைய நாகரீகம். திருமணம் செய்யாதே கற்பு கிடையாது என்று பெரியார் கூறிய நிலையில் அவர்களே  பெரியாரின் கொள்கைகளை கடைபிடிப்பதில்லை. என்னைப் பற்றி பேச திமுகவினருக்கும் திராவிட கழகத்தினருக்கும் தகுதி கிடையாது.

காம்ரேட்டிலிருந்து கார்ப்பரேட் ஆக மாறியவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர். அவர்களுக்கு என்னைப் பற்றி பேச தகுதியே கிடையாது. அந்த கட்சியில் ஒரே ஒரு உண்மையான தலைவர் ஐயா நல்ல கண்ணு மட்டும்தான். என்னை பாலியல் குற்றவாளி என்று சண்முகம் எப்படி கூறலாம். கம்யூனிஸ்டு கட்சியில் செயல்படாத தலைவர்கள் இருக்கிறார்கள். மேலும் அண்ணா பல்கலைக்கழக சம்பவம் ,பொள்ளாச்சி சம்பவம் என 26-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கும்போது அதைப் பற்றி ஏன் கம்யூனிஸ்ட் கட்சியினர் வாய் திறக்கவில்லை என்று கூறினார். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகமும் பதிலடி கொடுக்கும் விதமாக எங்களை பற்றி பேச சீமானுக்கு எந்த தகுதியும் இல்லை என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.