
சென்னை மாவட்டத்தில் உள்ள திருமுல்லைவாயல் பகுதியில் சாமுவேல் (70) என்பவர் வசித்து வந்துள்ளார். சாமுவேலுடன் 35 வயதுடைய அவரது மகள் இருந்தார். கடந்த ஐந்து மாதங்களாக இவர்களது வீடு பூட்டி கிடந்தது. இந்த நிலையில் பூட்டி கிடந்த வீட்டிலிருந்து தொடர்ந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்படி சம்பவம் இடத்திற்கு சென்ற போலீசார் வீட்டில் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சாமுவேலும் அவரது மகளும் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து போலீசார் 2 பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.