
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் மொபைல் ஃபோன் நமது வாழ்கையின் ஒரு பகுதியாகவே மாறி விட்டது. அதனுடன் தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பது, நம்மை சுற்றியுள்ள சூழலை கவனிக்காமல் விடும் ஒரு நிலைக்கு நம்மை கொண்டு செல்கிறது.
இதில், சாலையை கடக்கும் போதும், பொது இடங்களில் இருக்கும் போதும், நம்மை சுற்றியுள்ள அபாயங்களை உணர இயலாமல் ஆபத்துக்குள்ளாகும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ இதற்கு ஓர் எடுத்துக்காட்டு.
அந்த வீடியோவில், ஒருவர் தனது மொபைலில் பேசிக் கொண்டிருக்கும் போது, அவரது பின்னால் ஒரு பாம்பு நீண்ட நேரம் அருகில் நின்றது. ஆனால் அந்த நபர் மொபைலில் அதிகமாக யாருடனோ தனது மனதை கொடுத்ததால், அந்த பாம்பு இருப்பதை உணரவே இல்லை. ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த பாம்பு, அவரது தலையை நோக்கி தாக்கியது.
View this post on Instagram
“>
நல்வாய்ப்பாக, அவர் தலையில் தொப்பி அணிந்திருந்ததால், நேரடி தாக்கம் தவிர்க்கப்பட்டது. இல்லையெனில், விஷம் உடனடியாக மூளையில் பரவி, மரணமடைந்திருக்க வாய்ப்பு அதிகம். இந்த சம்பவம், மொபைல் போன் பேசும் போது சுய விழிப்புணர்வு மிக முக்கியம் என்பதை மீண்டும் நமக்கு நினைவூட்டுகிறது.