
ஐபிஎல் தொடரில் சென்னை அணி பிளே ஆப் வாய்ப்பை இழந்த நிலையில் தோனி சொந்த ஊரான ராஞ்சிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் எம்.எஸ் தோனி பிரபல youtube சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அதில், நான் டுவிட்டரை விட instagram ஐ அதிகம் பயன்படுத்த விரும்புகிறேன். ஏனெனில் ட்விட்டரில் இதுவரை எனக்கு எந்த ஒரு நல்ல விஷயமும் நடந்ததில்லை.
அதாவது twitter-ல் ஏதாவது ஒன்றை பதிவிட்டால் அதை திரித்து சர்ச்சையாக்கி விடுவார்கள். அப்படி இருக்கும்போது நான் ஏன் அதில் இருக்க வேண்டும். எனக்கு instagram பிடித்துள்ளது. மேலும் அதில் அவ்வப்போது ஏதாவது வீடியோ வெளியிட்டு நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்பதை என்னுடைய ரசிகர்களிடம் வெளிப்படுத்துகிறேன் என்று கூறியுள்ளார்