ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் அப்பாவி உயிர்கள் பரிபோனது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தியது.
இன்று நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்த விவாதம் தொடர்ந்து வருகிறது. மத்திய வெளிளவுத்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்து வருகிறார். அவர் கூறியதாவது, இந்திய ராணுவம், சிஆர்பிஎப் மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீசார் ஆப்ரேஷன் மகாதேவ் நடவடிக்கையை எடுத்து வருகின்றனர்.
பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய மூன்று பயங்கரவாதிகள் என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர் அப்பாவி மக்களை அவர்களின் குடும்பத்தினரின் முன்னிலையில் மதத்தை கேட்டு கொன்றவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
