ஆந்திர மாநிலத்தில் கௌதமி என்ற 24 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவர் கல்லூரி படிப்பை முடித்த பிறகு ஒரு அழகு நிலையம் வைத்து நடத்தி வந்தார். இந்த இளம் பெண் கணேஷ் என்ற 25 வயது வாலிபரை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் காதலித்த நிலையில் கணேஷ் நடவடிக்கைகள் பிடிக்காததால் கௌதமி அவரை விட்டு விலகி சென்று விட்டார். இதைத்தொடர்ந்து கௌதமிக்கு வேறொரு வாலிபருடன் திருமணம் நிச்சயக்கப்பட்டது. அதன்படி இவர்கள் இருவருக்கும் வருகிற 29ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. இதுகுறித்து கணேஷ் கேள்விப்பட்ட நிலையில் தனக்கு கிடைக்காத பெண் வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று நினைத்தார்.

இதன் காரணமாக அழகு நிலையத்திற்கு சென்ற அவர் கவுதமியை கத்தியால் குத்தினார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து அவருடைய முகத்தில் வீசிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அந்த இளம் பெண்ணை அருகில் இருந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ள நிலையில் தப்பி ஓடிய வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள். மேலும் இன்று காதலர் தினத்தில் இளம் பெண் மீது முன்னாள் காதலன் ஆசிட் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.