
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 94 வயது முதியவர் ஒருவரின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அந்த முதியவர், தூக்கத்திலிருந்து எழுந்தவுடன் தனது தாயை “மா-மா” என அழைத்து கத்தும் காட்சி வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைப் பார்த்த அனைவரும் நெஞ்சை உருக்கும் உணர்ச்சியில் மூழ்கி வருகின்றனர்.
அந்த முதியவருக்கு மறதி நோய் இருப்பதால், அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். தன்னுடைய தற்போதைய வயதையும் உணராமல், குழந்தைப் பருவ நிலைக்கு திரும்பிய அவருக்கு, விழித்தவுடனே தாயை தேடும் மனநிலை ஏற்பட்டுள்ளது. தன் அம்மாவை எங்கே என்று கேட்ட அவரிடம், அருகிலிருந்த செவிலியர், “அம்மா வெளியே போயிருக்காங்க, வருவாங்க” என்று சமாதானப்படுத்துகிறார்.
View this post on Instagram
இது போதுமானதாக இல்லாமல், குழந்தையைப் போல அழத் தொடங்குகிறார் அந்த முதியவர். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டதும் பலர் இதைக் கண்டபோது கண்களில் கண்ணீர் வந்ததாக கூறியுள்ளனர். ஒருவரின் தாயைப் பற்றிய பாசம் வயதையும் நினைவுகளையும் மீறி எவ்வளவு ஆழமாக இருக்கிறது என்பதை இந்த வீடியோ மீண்டும் நினைவூட்டுகிறது. சமூக ஊடகங்களில் இப்போது இது மிகுந்த வைரலாக பரவி வருகிறது.