டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பாஜகவை கடுமையாக விமர்சித்தார். டெல்லியில் பள்ளிகள், மருத்துவமனைகள் கட்ட விடாமல் பாஜக தடைகளை உருவாக்குகிறது என்று கூறினார். சாமானியர்களின் குழந்தைகள் தங்கள் குழந்தைகளைப் போல் படிப்பதை பாஜக ஆட்சியாளர்கள் விரும்பவில்லை என்றார்.

மேலும் பாஜகவின் சதிகளை எதிர்த்து டெல்லியில் எப்படி நல்லாட்சி நடத்துவது என்பது தனக்கு மட்டுமே தெரியும் என்றும், அதற்காக தனக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.