தமிழ் சினிமாவில் கடந்த 2003-ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளியான காதல் கொண்டேன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சோனியா அகர்வால். இந்த படத்திற்கு பிறகு பல வெற்றி படங்களில் நடித்த சோனியா அகர்வால் கடந்த 2006-ம் ஆண்டு இயக்குனர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் செல்வராகவன் மற்றும் நடிகை சோனியா அகர்வால் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்ட நிலையில் இயக்குனர் செல்வராகவன் கீதாஞ்சலி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நடிகை சோனியா அகர்வால் பாடகர் எஸ்பிபி சரணை  இரண்டாவது ஆக திருமணம் செய்து கொண்டதாகவும் அவருடன் இருக்கும் திருமண புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது.

ஆனால் தான் எஸ்பிபி சரணை திருமணம் செய்து கொள்ளவில்லை என தற்போது சோனியா அகர்வால் மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, நானும் எஸ்பிபி சரணும் ஒரு தொடரில் நடிக்கும் போது எடுக்கப்பட்ட திருமண புகைப்படத்தை பார்த்து எல்லோரும் எனக்கு திருமணம் நடந்து விட்டதாக கூறினார்கள். ஆனால் அந்த தகவலில் உண்மை இல்லை. நான் நிச்சயமாக மறுமணம் செய்து கொள்வேன். எத்தனை நாட்கள் தான் தனியாக வாழ முடியும். மேலும் எனக்கு பொருத்தமான ஒருவருக்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன். அப்படிப்பட்ட ஒருவர் கிடைத்தவுடன் நான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறினார்.