மதுரை மீனாட்சி மிஷினில் மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், மதுரையில் ஒரு வாரத்தில் மட்டும் நான்கு மூதாட்டிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்தில் கொலை மற்றும் கொள்ளை என்ற செய்தி வராத நாளே கிடையாது. அந்த அளவுக்கு சட்டம் ஒழுங்கு உள்ளது. எதிர்க்கட்சிகளை பழிவாங்க மட்டுமே காவல்துறையை முதல்வர் ஸ்டாலின் பயன்படுத்தி வருவதாக அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.