தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் வில்லி மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வருபவர் வரலட்சுமி சரத்குமார். குறிப்பாக வில்லியாக நிறைய படங்களில் நடித்திருக்கிறார். இது தொடர்பாக வரலட்சுமி சரத்குமார் அளித்துள்ள பேட்டியில் “எனக்கு வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க பல வாய்ப்புகள் வருகிறது.

திரையுலகில் கிளாமர் வேடங்களில் நடிப்பதற்கு பல நடிகைகள் உள்ளனர். எனினும் சில வில்லி கதாபாத்திரங்களில் நடிக்க நான் மட்டுமே தகுதியான நிலையில் உள்ளேன். இதனால் இது எனக்கு மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது. பாலா இயக்கிய தாரை தப்பட்டை திரைப்படத்தில் நான் நடித்த போது ஒரு காட்சியில் என்னை அடிப்பார்கள். அடி வாங்கியபடி வசனம் பேசவேண்டும்.

அவற்றில் ஒரே டேக்கில் நடித்து முடித்தேன். ஆனால் பாலா கட் சொல்ல மறந்துவிட்டார். இதற்கிடையில் என்னை அடித்ததில் காயம் ஏற்பட்டது. அதனை பார்த்து பாலா அதிர்ச்சியடைந்தார். ஆனால் காட்சி நன்றாக வந்த திருப்தி மட்டும்தான் எனக்கு இருந்தது. அதன்பின் என்னை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அந்த சம்பவத்தை எனது வாழ்க்கையில் மறக்க முடியாது. அப்படத்திலிருந்து பாலா என் குருவாகி விட்டார்” என்று விளக்கம் அளித்தார்.