சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்திக்கிறார் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி.

சேலம் நெடுஞ்சாலை நகரில் இருக்கக்கூடிய இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர் கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியை தமிமுன் அன்சாரி சந்திக்க இருக்கிறார். அதற்காக தற்போது நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. சற்று நேரத்திற்கு முன்பதாக ஆர்.பி உதயகுமார் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசிக் கொண்டிருக்கிறார். இன்னும் சற்று நேரத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி வர இருக்க கூடிய சூழ்நிலையில், இந்த சந்திப்பு எதற்காக என முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

பாரதிய ஜனதா கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேறியதை அடுத்து சிறுபான்மையினர் வாக்குகளை பெறுவதற்காக அதிமுக மிகுந்த முயற்சிகள் மேற்கொண்டுள்ளது. மேலும் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக சந்திப்பு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.