தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இன்றைய காலகட்டத்தில் பல விதவிதமான மோசடிகளும் அரங்கேறி வருகின்றனர். அந்தவகையில் நிர்வாண வீடியோ மூலம் மிரட்டப்பட்ட இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். இந்த சம்பவம் ஹைதராபாத்தில் நடந்துள்ளது. ஆந்திர மாநிலம் பாபாட்டலைச் சேர்ந்த இளைஞர் (22) எஸ்ஸார்நகரில் தங்கியுள்ளார். சமீபத்தில் வாட்ஸ்அப்பில் இளம்பெண் ஒருவருடன் வீடியோ கால் செய்துள்ளார்.

சைபர் கிரைம் குற்றவாளிகள் அழைப்பு பதிவை நிர்வாண வீடியோவாக மாற்றி பணம் கேட்டதால் அவர் ரூ.10,000 அனுப்பியுள்ளார். மீண்டும் துன்புறுத்தப்பட்டு, வீடியோக்களை நண்பர்களுக்கு அனுப்பியதால் மனமுடைந்த அவர், விடுதி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.