கருக்கலைப்பு மாத்திரையை உருவாக்க வழிவகுத்த மைஃபெப்ரிஸ்டோன் மருந்தை உருவாக்கிய பிரபல பிரெஞ்சு விஞ்ஞானியும் மருத்துவருமான எட்டியென்-எமிலி பவுலியூ, தனது 98வது வயதில் பாரிஸில் உள்ள இல்லத்தில் காலமானார். அவருடைய மனைவி சிமோன் ஹராரி பவுலியூ தகவலை AFP-க்கு உறுதிப்படுத்தியுள்ளார்.

பெண்களின் சுதந்திரம் மற்றும் மருத்துவ முன்னேற்றத்திற்காக அர்ப்பணித்த அவரது வாழ்க்கை, உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. RU-486 என்றழைக்கப்படும் கருக்கலைப்பு மாத்திரை, அறுவை சிகிச்சைக்கு மாற்றாக மில்லியன் கணக்கான பெண்களுக்கு பாதுகாப்பான தீர்வாக மாறியது. இதனால், அவருக்கு சினிமா பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை அனைவரும் பாராட்டுகளை வழங்கினர்.

கடந்த 1926ல் யூதக் குடும்பத்தில் பிறந்த பவுலியூ, 15-ஆம் வயதில் நாஜி ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடியவர். அவர் அல்சைமர் நோய், மனச்சோர்வு உள்ளிட்ட பல மருத்துவத் துறைகளிலும் ஆய்வுகளை மேற்கொண்டு வந்தார். அமெரிக்காவில் பணியாற்றவும் அழைக்கப்பட்ட இவர், 1989ம் ஆண்டு லாஸ்கர் விருது பெற்றார்.

கடந்த 2023-ல், பிரான்சின் மிக உயர்ந்த விருதான கிராண்டு குரோயிக்ஸ் டி லா லெஜியன் டி’ஹானூர் விருதை ஜெ. மக்ரோன் வழங்கினார். “நீங்கள் நாஜி விஞ்ஞானிகளுடன் ஒப்பிடப்பட்டாலும், சுதந்திரம் மற்றும் அறிவியலுக்கான நம்பிக்கையில் நிலைத்திருந்தீர்கள்” என மக்ரோன் உருக்கமாக கூறியிருந்தார். மூன்று குழந்தைகள், எட்டு பேரக்குழந்தைகள், ஒன்பது கொள்ளுப் பேரக்குழந்தைகளை விட்டு பவுலியூ உலகைவிட்டுப் பிரிந்துள்ளார்.