இந்தியாவில் ஒரு பிச்சைக்காரன் மிகவும் ராயலாக வாழ்ந்து வருகிறார் .அவருடைய சொத்து மதிப்பை கேட்டாலே நமக்கு தலை சுற்றி விடும். மும்பை மாநிலத்தில் வசித்து வருபவர் பாரத் ஜெயின். இவர் கடந்த 30 வருடங்களில் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் தான் பிச்சை எடுத்து வருகிறார். சமீப காலமாகவே இவருடைய நடவடிக்கையால் சந்தேகம் அடைந்த சிலர் இவரை பின்தொடர்ந்து கண்காணித்த பொழுது தான் இவர் எவ்வளவு பெரிய கோடீஸ்வரர் என்பது தெரியவந்துள்ளது. இவருடைய மொத்த சொத்து மதிப்பு 7.5 கோடியாம்.

இவருக்கு சொந்தமாக 1.2 கோடி மதிப்பில் இரண்டு பெட் ரூம்கள் கொண்ட வீடும்  இருக்கிறதாம். மேலும்  இரண்டு கடைகள் இருக்கிறதாம். ஒரு கடைக்கு வாடகையாக 30 ஆயிரம் ரூபாய் மாதம் தோறும் வருகிறதாம். குழந்தைகள் கான்வென்ட் பள்ளியில் படித்து வருகிறார்கள். இவருக்கு ஒரு சொகுசுகாரூமும் உள்ளது. இவர் ஒரு நாளைக்கு 2500 வரை பிச்சை எடுத்து சம்பாதித்து மாதம் 60 ஆயிரம் முதல் 75 ஆயிரம் வரை சம்பாதிக்கிறாராம். இவ்வளவு பணக்காரராக இருந்தும் இன்னும் பிச்சை எடுக்கும் தொழிலை விடாமல் இருக்கிறார் பாரத் ஜெயின்.