உலகமே ஆவலோடு எதிர்பார்த்த 2026 ஃபிஃபா உலகக்கோப்பையின் அந்த மகுடத்திற்கான அரையிறுதிப் போட்டியில் உலகக் கால்பந்து வரலாற்றின் இரு பெரும் சக்திகளான ஸ்பெயினும் பிரான்ஸும் மோதிய அந்தத் தருணம், ஒரு போர்க்களத்தை நினைவூட்டியது. ஆனால், இறுதி விசில் ஊதப்பட்டபோது, பிரான்ஸ் ரசிகர்களின் இதயங்கள் நொறுங்கிப் போயின. ஸ்பெயினின் அசாத்தியமான 2-0 என்ற கோல் கணக்கிலான வெற்றி, பிரான்ஸின்  கனவை சுக்குநூறாக்கியுள்ளது.

ஆட்டம் தொடங்கிய முதலே மைதானத்தில் அனல் பறந்தது. பிரான்ஸ் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் கைலியன் எம்பாப்பே மற்றும் அவரது அணியை தடுத்து நிறுத்த, ஸ்பெயின் அணி ஒரு இரும்பு அரணைப் போன்ற தற்காப்பு வியூகத்தை வகுத்திருந்தது.

 

பிரான்ஸ் வீரர்கள் கோல் அடிக்க வழிதேடித் திணறிய வேளையில், ஆட்டத்தின் முதல் பாதியில் ஸ்பெயின் அணிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. பந்தை உற்று நோக்கி, ரசிகர்களின் இதயத்துடிப்பை நிறுத்தி, மிகத் துல்லியமாக பிரான்ஸின் வலைக்குள் பந்தை திணித்தார் மிக்கேல் ஓயார்சபல். மைதானத்தின் ஒரு பகுதி ஸ்பெயின் ரசிகர்களின் ஆரவாரத்தில் அதிர, மறுபுறம் பிரான்ஸ் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

முதல் பாதியின் அதிர்ச்சியில் இருந்து மீண்டு, பிரான்ஸ் அணி பதிலடி கொடுக்கத் துடித்தது. ஆனால், ஆட்டத்தின் 58-வது நிமிடத்தில் பிரான்ஸ் ரசிகர்களின் நெஞ்சில் பேரிடி விழுந்தது. ஸ்பெயின் அணியின் பெட்ரோ போரோ மின்னல் வேகத்தில் வந்து இரண்டாவது கோலை அடித்து ஸ்பெயினின் வெற்றியை இரட்டிப்பாக்கினார்.

அந்த இரண்டாவது கோல் விழுந்த கணத்தில், பிரான்ஸ் ரசிகர்களின் முகங்களில் ஏமாற்றமும், சோகமும், ஆத்திரமும் கலந்த உணர்வுகள் அப்பட்டமாகத் தெரிந்தன. பாரிஸின் வீதிகளிலும் மைதானத்திலும் இருந்த பிரான்ஸ் ரசிகர்கள் தலையில் கைவைத்தபடி திகைத்து நின்றனர்.

ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில், கௌரவத்தைக் காப்பாற்ற பிரான்ஸ் அணி மரணப் போராட்டத்தை வெளிப்படுத்தியது. எம்பாப்பேயின் தலைமையில் பிரான்ஸ் வீரர்கள் ஆக்ரோஷமாக முன்னேறினர். ஆனால், அன்று ஸ்பெயினின் படை ஒரு அசைக்க முடியாத சுவராக நின்றன. பிரான்ஸ் வீரர்களின் ஒவ்வொரு முயற்சியையும் ஸ்பெயின் தவிடுபொடியாக்கியது.

இறுதி விசில் ஒலித்தபோது, ஸ்பெயின் வீரர்கள் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்ற மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர். ஆனால், பிரான்ஸ் வீரர்களோ மைதானத்திலேயே முழங்காலிட்டு கண்ணீர் வடித்தனர். இந்த 2-0 வெற்றி, ஸ்பெயின் அணியை உலகக்கோப்பையின் இறுதிப் பீடத்தை நோக்கி கம்பீரமாக அழைத்துச் சென்றுள்ளது. ஆனால், நடப்புத் தொடரில் பிரான்ஸ் அணியின் பயணம் மிக எமோஷனலாக, கண்ணீரோடு முடிவுக்கு வந்துள்ளது. உலகக்கோப்பையை ஏந்திப் பிடிக்க வேண்டும் என்ற பிரான்ஸ் ரசிகர்களின் கனவு, ஸ்பெயின் புயலால் கலைக்கப்பட்டு, ஒட்டுமொத்த பிரான்ஸ் தேசத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.