பிலிப்பைன்ஸ் நாட்டின் ஷெரீப் அகுவாக் நகர மேயர் அக்மத் அம்புத்துவான், தம்மைக் கொல்ல நடந்த ஒரு பயங்கரமான ராக்கெட் லாஞ்சர் தாக்குதலில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். அவர் தனது நிலப்பரப்பு வாகனமான லேண்ட் குரூசரில் சென்று கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் அந்த வாகனத்தை நோக்கி நேரடியாக ஆர்.பி.ஜி குண்டை வீசித் தாக்கினர்.
இந்த அதிர்ச்சியூட்டும் தாக்குதலில் மேயரின் வாகனம் பலத்த சேதமடைந்த போதிலும், வாகனத்தின் பாதுகாப்பு கவசம் மற்றும் அதிர்ஷ்டம் காரணமாக அவர் எவ்வித காயமுமின்றி உயிர் தப்பினார். இச்சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Land Cruiser took direct hit from RPG-7 and kept moving.
Armored Toyota Land Cruiser was struck by an RPG-7 during an ambush in Philippines. The vehicle absorbed the explosion and continued driving away, allowing the mayor to escape unharmed. pic.twitter.com/En7mLjCyFz
— Gun Lovers Club (@GunloverClub1) January 25, 2026
“>
இந்தக் கொலை முயற்சித் தாக்குதலானது பிலிப்பைன்ஸின் மாகுயிண்டானாவ் பகுதியில் நிலவும் அரசியல் பகையையும், பாதுகாப்பு அச்சுறுத்தல்களையும் மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. தாக்குதல் நடந்த இடத்திலிருந்து மேயர் அம்புத்துவான் உடனடியாகப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள அந்நாட்டு காவல்துறையினர், தாக்குதலுக்குப் பின்னால் இருப்பவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு நகரத்தின் மேயர் மீது பட்டப்பகலில் நடத்தப்பட்ட இந்தத் துணிச்சலான தாக்குதல் அந்நாட்டு மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
