
கர்நாடக மாநிலம் பெங்களூரில் பூஜா (22) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு சுனில் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் ஒரு வாடகை வீட்டில் பெங்களூரில் ஒன்றாக வசித்து வந்த நிலையில் திருமணத்தின்போது சுனிலுக்கு பெண் வீட்டில் இருந்து வரதட்சணை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தன் மனைவியிடம் சுனில் வரதட்சணை கேட்டு அடிக்கடி தகராறு செய்துள்ளார்.
ஆனால் பூஜா வரதட்சணை கொடுப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதற்கிடையில் சுனிலின் சகோதரி உட்பட குடும்பத்தினரும் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். இதனால் மிகுந்த மன உளைச்சலில் பூஜா இருந்துள்ளார். இது தொடர்பாக பூஜா தன் பெற்றோரிடம் வேதனையுடன் தெரிவித்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பூஜாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சுனில் மற்றும் அவருடைய குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.