கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் செங்கோட்டர் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். அவர் இரவு நேரத்தில் தனது குடும்பத்துடன் காரில் சென்று கொண்டிருந்தார். இந்த நிலையில் கூகுள் மேப் காட்டிய வழியின்படி பாலகிருஷ்ணன் காரை ஓட்டிச் சென்றார். அப்போது கார் திருச்சூர் அருகே வந்த போது காயத்ரிபுழா ஆற்றின் தடுப்பணையைத் தாண்டி கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்தப் பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்தத் தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காரில் பயணம் செய்த ஐந்து பேரை உயிருடன் பத்திரமாக மீட்டனர். இதனையடுத்து பொக்லைன் இயந்திரம் மூலம் விபத்தில் சிக்கிய கார் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..