காஷ்மீரில் உள்ள தாஜிவாஸ் பனியாற்றில்  மலையேற்ற வீரர்கள் இருவர் சிக்கி உள்ளதாக இந்திய விமானப்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைஅடுத்து  விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் இருவரும் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து பாதுகாப்புத் துறை சார்பில் கூறப்பட்டதாவது “இந்திய விமானப்படையில் இருந்து MK3, ALH ஹெலிகாப்டர்கள் மூலம் காயமடைந்த நிலையில் பனியாற்றில் சிக்கி இருந்த இரண்டு மலையேற்ற வீரர்கள் பத்திரமாக மிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவருக்கு அதிகப்படியான எலும்பு முறிவு, காயங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்திய விமானப்படைக்கு தகவல் கிடைத்த ஒரு மணி நேரத்திற்குள் இருவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்” என கூறினார்