
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முடிந்தால் அண்ணா சாலை பக்கம் வரட்டும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழகம் கேட்ட நிதியை உங்களால் தர முடியவில்லை. தனியார் பள்ளி நடத்துபவர்கள் சட்ட விரோதமாகவா நடத்துகிறார்கள்? தனியார் பள்ளி நடத்துபவர்கள் மத்திய அரசிடம் உரிய அனுமதி பெற்று நடத்துகின்றனர்.
தனியார் பள்ளிகளில் இலவச உணவு கொடுக்கப்படுகின்றதா அல்லது இலவச சீருடையாவது கொடுக்கிறார்களா? முன்மொழி கொள்கை என்பது அரசு பள்ளியோடு தொடர்புடையது. அண்ணாமலை எங்கள் வீட்டில் சுவரொட்டிகள் ஒட்டப்படுவதாக சொல்லி இருக்கிறார். முடிந்தால் பாஜக தலைவருக்கு உண்மையிலேயே தைரியம் இருந்தால் அறிவாலயத்துக்கு அல்ல, அண்ணா சாலை பக்கம் வர சொல்லுங்கள். நிதியை பெற்றுத்தர துப்பில்லாதவர்கள் சவால் விடுவதில் ஒன்றும் குறைச்சல் இல்லை என்று உதயநிதி ஆவேசமாக பேசியுள்ளார்.