சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்று வரக்கூடிய உணவுத் திருவிழாவில் மாட்டிறைச்சியை மட்டும் புறக்கணிக்க வேண்டிய அவசியம் என்ன? பெருமளவில் மக்கள் பீப் சாப்பிட கூடியவர்கள். ஆனால் திட்டமிட்டே ஒரு உணவை புறக்கணிப்பது கண்டிக்கத்தக்கது என இயக்குனர் பா.ரஞ்சித் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டார்.

இந்த நிலையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையத்திற்கு உடனடியாக விளக்கம் அளித்துள்ளது. சென்னை மெரினாவில் நடைபெற்று வரும் உணவு திருவிழாவில் மாட்டிறைச்சி புறக்கணிக்கப்படவில்லை. 17வது அரங்கில் பீப் வகை உணவுகள் விற்பனை செய்யப்படுகிறது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.