கரூர் மாவட்டத்தில் உள்ள தெற்குப்பட்டி குருவின் காரத் தெருவில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பழனியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட பழனியம்மாளை அவரது மகன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்த பிறகு தான் பழனியம்மாளை பாம்பு கடித்தது தெரியவந்தது. இதனால் மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று பழனியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.