
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள அனேகல் பகுதியில் சங்கர் என்ற 28 வயது நபர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 26 வயதில் மானசா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 3 வயதில் ஒரு மகன் இருக்கும் நிலையில் ஒரு வாடகை வீட்டில் வசித்தனர்.
இந்நிலையில்மானசாவுக்கு வேறொருவருடன் கள்ளத்தொடர்பு இருந்ததாக சங்கர் சந்தேகப்பட்டுள்ளார். கடந்த 3-ம் தேதி சங்கர் வேலைக்கு சென்ற நிலையில் மறுநாள் காலை தான் திரும்பி வருவேன் என்று கூறியுள்ளார். ஆனால் வேலை விரைவாக முடிந்ததால் அவர் இரவு நேரத்தில் திரும்பி வந்தார். அப்போது அவருடைய மனைவி வேறொருவருடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
இதனைப் பார்த்த சங்கர் மிகவும் அதிர்ச்சி அடைந்த நிலையில் பின்னர் அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே கடுமையான தகராறு ஏற்பட்டது. பின்னர் அவரது மனைவி வீட்டை விட்டு வெளியேறுவதாக கூறினார். அவர் வீட்டை விட்டு வெளியேறிய பிறகும் அடிக்கடி சங்கருடன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதேபோன்று நேற்று முன்தினமும் சங்கருக்கும் அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த சங்கர் தன்னுடைய மனைவியை கொடூரமாக அடித்ததோடு பின்னர் அவரது தலையை தனியாக வெட்டினார். அந்த தலையோடு அவர் ஸ்கூட்டரில் எடுத்துச் சென்று தானாகவே போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார். அவர் தன்னுடைய மனைவியை கொலை செய்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.