
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு தற்போது நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னும் ஓராண்டில் திமுகவின் ஆட்சிக்காலம் நிறைவுக்கு வருகிறது. இப்படியான நிலையில் மற்ற கட்சிகளுக்கு போட்டியாக நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி தேர்தலில் களமிறங்கியுள்ளார். இதனால் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் மத்திய அரசு முன்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் தமிழகத்திற்கான கல்வி நிதியை வழங்குவோம் என்று தெரிவித்துள்ள நிலையில் அந்த கருத்து தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
இப்படியான நிலையில் நேற்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், நீட் தேர்வு குறித்த ரகசியம் எங்களது பாக்கெட்டில் இருப்பதாக கூறினார்கள். தங்கமலை ரகசியமாக வைத்திருக்கக் கூடிய அந்த ரகசியத்தை எப்போது வெளியிடப் போகிறீர்கள் என்று நாங்கள் பலமுறை கேட்டு விட்டோம். ஆனால் இதுவரை அந்த ரகசியத்தை வெளியிடவில்லை. பள்ளிக்கூடம் முதல் பல்கலைக்கழகம் வரை இன்று பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.
பெண்களுக்கு எந்த இடத்திலும் பாதுகாப்பு இல்லாத நிலை தான் தற்போது தமிழகத்தில் நிலவுகிறது. தாத்தாவிற்கு பின் மகன், மகனுக்குப் பின் பேரன், பேரனுக்கு பின் கொள்ளு பேரன் என்று வந்தால் இனி எதற்கு தேர்தல்? சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்த இனி தமிழகத்தில் பொது தேர்தல் நடத்த தேவையில்லை. கருணாநிதியின் குடும்பம் தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்று பட்டயம் போட்டு கொடுத்து விடலாமா? தமிழக மக்கள் தற்போது ஆட்சி மாற்றத்திற்கு தயாராகி விட்டார்கள் என்று முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேசியுள்ளார்.