
உத்தரபிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோவில் உள்ள டெலிபாக் கிராசிங்கில், ராணுவத்தில் பணியாற்றும் லெப்டினன்ட் கர்னலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் அறைந்த சம்பவம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹர்தோயில் வசித்து வரும் ஆனந்த் பிரகாஷ் சுமன் என்ற லெப்டினன்ட் கர்னல், தனது குடும்பத்துடன் பாட்னாவுக்கு திரும்பிக் கொண்டிருந்த போது, டெலிபாக் சந்திப்பில் போலீசாரின் கார் தவறான பக்கத்திலிருந்து வந்தது. இதனால் அவருடைய கார் திடீரென நிற்க நேர்ந்தது. இந்தச் சூழ்நிலையில், பின்னால் வந்த ஆட்டோ மோதியது.
இந்த விபத்திற்கு காரணமான போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது கேள்வி எழுப்பிய கர்னலை, அவர் திட்ட உடனே அறைந்தம் விட்டார். இந்த சம்பவம் சனிக்கிழமை நடந்ததாக கூறப்படுகிறது. தற்போது இந்த சம்பவத்தின் சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பொதுமக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவில், போலீசார் காரிலிருந்து இறங்கி, கர்னலை தாக்குவதை தெளிவாகக் காண முடிகிறது.
लखनऊ : इंस्पेक्टर का कर्नल को थप्पड़ जड़ने का CCTV आया सामने
➡लेफ्टिनेंट कर्नल आनंद प्रकाश ने PGI कोतवाली में तहरीर दी
➡इंस्पेक्टर पर थप्पड़ मारने, पैर पर गाड़ी चढ़ाने का आरोप
➡21 जून की उस घटना का CCTV फुटेज भी सामने आया.#Lucknow @lkopolice pic.twitter.com/KsxH1xpnJJ— भारत समाचार | Bharat Samachar (@bstvlive) June 24, 2025
இந்த சம்பவம் தொடர்பாக PGI காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதோடு, குற்றம் சாட்டப்பட்ட இன்ஸ்பெக்டர் வினய் குமார் சரோஜ் தலைமறைவாக உள்ளதாகவும், அவரது மொபைலும் அணைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ராணுவ அதிகாரியை பொது இடத்தில் அவமானப்படுத்திய போலீசாருக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் குரல்கள் எழுந்து வருகின்றன.