முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் திமுகவினரால் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாளையொட்டி, அவருக்காக திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் மடல் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், “உங்களுக்கு சொல்ல ஒரு நல்ல செய்தி கொண்டு வருகிறேன். உங்கள் கனவுகளை எல்லாம் நிறைவேற்றி வருகிறோம் என்பது தான் அந்த செய்தி. நீங்கள் இருந்து செய்ய வேண்டியதை நான் அமர்ந்து செய்து கொண்டிருக்கிறேன். உங்களை காண அணிவகுத்து வருகிறோம்” என தெரிவித்துள்ளார்.