நடிகை வனிதா விஜயகுமார் அடையாளம் தெரியாத மர்ம நபரால் நேற்று இரவு தாக்கப்பட்டதாக சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ள சம்பவம் வைரலாகி வருகிறது. இந்நிலையில்  நடிகை வனிதா விஜயக்குமார்  தன்னை பிரதீபின் ஆதரவாளர்கள் தாக்கியதாக வனிதா கூறினார். இதனையடுத்து அதற்கு, தனது X தளத்தில் பிரதீப் ஆண்டனி, உங்களுக்கு இப்படி நடந்திருக்க கூடாது என என வருத்தம் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

மேலும்” போட்டியாளர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களுக்கு எதிராக நான் எதுவும் செய்யவில்லை. என் பெயரைச் சொல்லி யார் இதை செய்தது என்று எனக்கு தெரியாது” எனவும் பதிலளித்துள்ளார்.