
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்காளர் பட்டியலில் முறைகேடு இருப்பதாக தேர்தல் ஆணையத்தில் இ.பி.எஸ் தரப்பைச் சேர்ந்த சி.வி சண்முகம் புகார் அளித்துள்ளார். இது குறித்து டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் அவர் அளித்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது, வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்த பெரும்பாலானவர்களின் பெயர்கள் தொகுதிக்கு தொடர்பு இல்லாதவர்கள் எனவும் தொகுதியை சேர்ந்த சுமார் 8000 வாக்காளர்களின் பெயர்கள் இரண்டு முறை பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தமிழக தேர்தல் அதிகாரி சத்திய பிரதாசாகுவிற்கு, இது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பி உள்ளது. இதனையடுத்து கடிதத்தை தலைமை அதிகாரி சத்திய பிரதாசாகு, மாவட்ட தேர்தல் அதிகாரி அனுப்பி வைத்துள்ளார். இது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி அனுப்பக்கூடிய விரிவான அறிக்கையை தலைமை தேர்தல் அதிகாரி இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப இருக்கின்றார். மேலும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடைபெறுவதாகவும், விதிமீறல்கள் நடைபெறுவதாகவும் தொடர்ந்து அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.