ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க சார்பாக போட்டியிடும் இ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து மக்களவை உறுப்பினர் கனிமொழி பிரச்சாரம் மேற்கொண்டு உள்ளார். இந்த கூட்டத்திற்கு வரும் பெண்களுக்கு சில்வர் குடம் மற்றும் தட்டு பரிசாக வழங்கப்படுவதாக கூறி அழைத்து வந்துள்ளனர். இந்நிலையில் கூட்டத்திற்கு 300-க்கும் மேற்பட்ட பெண்கள் வந்துள்ளனர். ஆனால் கனிமொழி வருவதற்கு சற்று தாமதமானதால் வரிசையாக பெண்களுக்கு குடம் வழங்கப்பட்டது.

ஆனால் குடம் வழங்கிய நேரத்தில் அனைவரும் ஒரே இடத்தில் குவிந்ததால் குடம் கொடுக்க முடியாமல் திணறியே தி.மு.க-வினர் சில்வர் குடம் அடங்கிய சிமெண்ட் சாக்கு பையை வீசி எரிந்துள்ளனர். இதனை தொடர்ந்து குடத்தை எடுப்பதற்காக பெண்கள் போட்டி கொண்டு சென்று சில்வர் குடங்களை எடுத்து சென்றனர். அதில் ஒரு குடத்துக்கு இரண்டு பெண்கள் சண்டை போட்டுக் கொண்டனர். மேலும் சில்வர் குடம் இல்லாதவர்களுக்கு தட்டு பரிசாக அளிக்கப்பட்டுள்ளது. ஒரு குடத்துக்கு இரண்டு பெண்கள் சண்டை போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.