ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இந்திய தேர்தல் தலைமை ஆணையத்திற்கு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் சுதந்திரமாகவும் ஜனநாயக முறைப்படியும் நடப்பதை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.

அதில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பணம் கொடுத்து வெற்றி பெறலாம் என திமுக நினைக்கிறது. கடந்த மாதம் 29-ஆம் தேதி அமைச்சர் கே.என் நேரு மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் பண விநியோகம் செய்தது தொடர்பான ஆடியோ வெளியானதால்  இது தொடர்பாக விரிவான தகவல்களுடன் திமுகவினர் மீது விசாரணை நடத்த வேண்டும் என அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.