ரவிச்சந்திரன் அஸ்வின் தான் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் என்று கேப்டன் ரோகித் சர்மா புகழாரம் சூட்டியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், அஸ்வின் நிறைய பிரஷர்களை தாங்கிக் கொள்கிறார். ஒரு போட்டியில் அவர் சரியாக விக்கெட் எடுக்கவில்லை என்றால் உடனே அவர் சரியில்லை என்று சொல்வார்கள். அவரும் சக மனிதர் தானே. அவரால் முடிந்த அனைத்து யுக்திகளையும் செயல்படுத்துகிறார் என தெரிவித்துள்ளார்.