கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3,100 கோடி செலவில் 1 லட்சம் வீடுகள் கட்டுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு இன்று  வெளியிட்டுள்ளது. அந்தவகையில் அனைத்து குடிசைகளையும் ஆய்வு செய்து, தகுதியின் அடிப்படையில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் பயனாளிகளை தேர்வு செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஊராட்சி தலைவர், உதவி பொறியாளர், வட்டார பொறியாளர், வார்டு உறுப்பினர் குழு பயனாளிகளை தேர்வு செய்யும். குடிசை வீடுகள் சர்வே விவரங்களை வரும் 31ஆம் தேதிக்குள் ஊரக வளர்ச்சித்துறை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.