பிரிட்டன் நாட்டில் வயதானவர்கள் அனைவரும் சேர்ந்து அவர்களுக்காக ஒரு கிராமத்தை அமைத்து அதில் நிம்மதியாக வாழ்ந்து வருகிறார்கள். பிரிட்டனில் கேனாக் மில் என்ற கிராமம் ஒன்று உள்ளது. கட்டிட கலைஞரான தோர்ன் என்பவர் தன்னுடைய நண்பர்கள் குழு உடன் இணைந்து 2.5 ஏக்கர் பரப்பளவில் இந்த சுற்றுச்சூழல் கிராமத்தை அமைத்துள்ளார். இவர் லண்டனில் தனியாக வாழ்ந்ததால் அது அவருக்கு மிகவும் பிடித்திருந்த காரணத்தால் அவரைப் போல மற்றவர்களும் அந்த சுகத்தை பெற வேண்டும் என்பதற்காக இந்த இடத்தை அவர் உருவாக்கியுள்ளார். இங்கு வயதானவர்களை தவிர வேறு யாரும் கிடையாது.

இங்கு வசிக்கும் மக்கள் அனைவரும் சேர்ந்து உணவு சமைப்பார்கள். அனைவரும் ஒன்றாக புதிய திறன்களை கற்றுக் கொள்கின்றனர். மேலும் ஒருவருக்கொருவர் எந்த பணமும் வழங்காமல் வாழ்ந்து வருகிறார்கள். வாரத்தில் நான்கு நாட்கள் முழு கிராமமும் ஒன்றாக பங்கேற்று பேசி சாப்பிட்டு மகிழ்வார்கள். இப்படி எதை செய்தாலுமே அவர்கள் ஒன்றாகத்தான் செய்கின்றனர்.